Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

1 September 2017

வானாெலி நினைவில் நிற்கும் குரல்கள்

வானொலி ரசிகர்களின் மலரும் நினைவுகளும், வானொலிக் கலைஞர்களுக்கு மரியாதையும்...

இலங்கை வானொலி நினைவலைகள்
வலைப் பூவில் எழுதிய ராஜ்குமார் அவர்களுக்கு நன்றிகள் பல

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் தென் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் இதன் பாதிப்பில்லாமல் வாழ்ந்திருக்க முடியாது. தமிழ்சேவை ஒன்று, தமிழ்சேவை இரண்டு என்று இருவிதமான ஒளிபரப்பினை நடத்தி வந்த இலங்கை வானொலி என் வாழ்க்கையில் நான் தொலைத்து விட்ட நண்பன்.
83 ம் ஆண்டு இனக்கலவரங்களில் அவன் கடுமையாக காயமுற்று விட்டான் . அதன் பின்பு அவனை முழுமையான வீச்சில் நான் பார்க்கவில்லை.

தமிழர்களிடம் வானொலி கேட்கும் வழக்கத்தையும், நல்ல தமிழ் பேசக் கூடிய ஆர்வத்தையும் வளர்த்தது இலங்கை வானொலி. இப்போது சென்னை FM வானொலி நிலையங்களை கேட்கும் போது தரமான, வித்தியாசமான நிகழ்ச்சிகளை தர இயலாத கற்பனைப் பஞ்சம் எரிச்சல் மூட்டுகிறது. பாடல்களை ஒலிபரப்புவதையும் பல்வேறு சுவைகள் கலந்து செய்யலாம் என்பதை நிரூபித்துக் காட்டியது இலங்கை வானொலி.

முதலில் நிகழ்ச்சிக்கு தரப்பட்ட அழகிய தமிழ் பெயர்கள் இன்றும் நினைவில் நிற்பவை.

1. பொங்கும் பூம்புனல் ( காலை 7.00)

2. நேயர் விருப்பம்

3. நீங்கள் கேட்டவை ( காலை 9.30 -10.00, மாலை 5.30-5.58)

4. அன்றும் இன்றும்

5. புது வெள்ளம்

6. மலர்ந்தும் மலராதவை

7. இசைத் தேர்தல்

8. பாட்டுக்கு பாட்டு

9. இசையும் கதையும்

10. இன்றைய நேயர்

11. விவசாய நேயர் விருப்பம்

12. இரவின் மடியில் ( இரவு 10.30)

இவ்வாறான தமிழ்பெயர்களை நம் நாட்டில் வைப்பார்களா? 

ஞாயிறன்று பகல் 1.30க்கு எழுபதுகளின் இறுதியில் 'இசைத் தேர்தல்" என்ற பாடல்களைத் தரப்படுத்தும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இப்பாடல்தான் முதலிடத்திற்கு வரும் என பந்தயம் கட்டி, ஆவலுடன் தமிழகமே காத்திருந்தது அந்த காலம். "இளமை ஊஞ்சலாடுகிறது" படத்தில் வரும் "என்னடி மீனாட்சி" பாடல் ஓராண்டுக்கும் மேலாக முதலிடத்தில் இருந்தது.

இன்று 'கவுண்ட்டவுன்" என்பதே தமிழ் வார்த்தையாகி விட்டது.
காமெடி டைம், சினிமா டைம் என்று தமிழில்லாத தமிழ்.
பெயர்களை விட்டுத் தள்ளுங்கள். 

இவ் வானொலி நிலையத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும், அறிவிப்பாளர்களுக்கும் இருந்த கற்பனைத்திறன் அலாதியானது.நிகழ்ச்சித் தயாரிப்பை பொறுத்தவரை பாட்டுக்கு பாட்டு, ஒரு நிமிடம் தமிழ், அன்றும் இன்றும் போன்ற , இன்றும் பல்வேறு கல்லூரி விழாக்களிலும், தொலைக் காட்சி சானலிலும் பார்க்கும் நிகழ்ச்சிக்களை உருவாக்கியவர்கள் இவர்கள்.

கே.எஸ். ராஜா என்ற புகழ்பெற்ற அறிவிப்பாளர் "திரைவிருந்து" என்ற இலங்கையில் ஓடும் திரைப்பட விளம்பர நிகழ்ச்சியை நடத்துவார். 

நீயா படத்தில் " என்னை விட்டுட்டு போறீங்களா ராஜா? என ஸ்ரீபிரியா அலறுவதாக வசனம் வரும். 

அந்த வசனத்தைப் போட்டுவிட்டு "போக மாட்டேன், அடுத்த வாரம் மீண்டும் சந்திப்பேன். அது வரை உங்களிடமிருந்து விடை பெறுவது கே.எஸ். ராஜா" என அசத்தலாக சொல்வார்.

இதே காலத்தில்தான் நம் திருச்சி வானொலி நிலையத்தில் பகலில் ஓர் இரவு படப் பாடலை போடுவதாக சொல்லி விட்டு, காளி கோவில் கபாலி படப் பாடலைப் போட்டுவிட்டு, தவறுக்கு வருந்தக் கூட மாட்டார்கள்.

இலங்கைக் கலவரத்தின் போது, கே.எச் ராஜா இறந்து விட்டதாக புரளி வந்தது. அப்துல் ஹமீதைப்பற்றியும் அதே புரளி வந்தது. ஆனால் இருவரும் நலமாகவே இருந்த

இன்னும் பல நிகழ்ச்சிகள் உண்டு. என் நினைவில் இருப்பதை எழுதுகிறேன். எனக்குப் பிடித்த அறிவிப்பாளர்களையும், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையும் நினைவுகூற விரும்புகிறேன்.

அப்துல் ஹமீதை அனைவரும் அறிவீர்கள். கே.எஸ். ராஜா, மயில் வாகனம் சர்மானந்தா,ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோர் என்னைக் கவர்ந்த அறிவிப்பாளர்கள்.

இதைத் தவிர "திரைக் கதம்பம்" என்று மாற்றுச் சனிக்கிழமைகளில் காலை 9.30 க்கு நிகழ்ச்சி நடத்துவார் ஒரு அறிவிப்பாளர். அவரது பெயர் மறந்து விட்டது. யாராவது சக நண்பர்கள் நினைவு படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன். கண்ணதாசனின் பிரியரான இவர் சுவையான நிகழ்வுகளையும் பாடல்களையும் பகிர்ந்து கொள்வார்.

கண்ணதாசன் மறைந்தவுடன், இலங்கை வானொலியில் இரண்டு மணிநேரம் அவரை நினைவு கூர்ந்து பாடல்கள் ஒளிபரப்பினார்கள். ஏழாம் வகுப்பு சிறுவனான நான்,கண்ணதாசன் என்ற கவிஞனின் வீர்யத்தை முழுமையாக உணரவைத்த நிகழ்ச்சி.

பாடல்களை ஒளிபரப்பும் போது இசையமைப்பாளர் மற்றும் கவிஞர்களின் பெயரையும் சேர்த்து சொல்லும் மிக நல்ல வழக்கத்தை இவர்கள் கடைபிடித்தார்கள், இதனாலேயே பல கவிஞர்களின் பாடல்கள் நினைவில் இருக்கிறது.

உதாரணமாக 'கத்தியைத் தீட்டாதே, உந்தன் புத்தியைத் தீட்டு" என்று ஒரு பாடல் உண்டு. பாட்டின் தொனியை வைத்து நிறைய பேர் பாடல் எழுதியது கண்ணதாசன் என்று சொல்வார்கள். ஆனால் இப்பாடலை எழுதியது ஆலங்குடி சோமு. இதை நான் அறிந்தது இலங்கை வானொலி மூலமாகத்தான்.

துப்பறியும் ரத்தினம் என்ற தொடர் நாடகம் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும். வாரவாரம் ஒரு கொலையை ரத்தினம் துப்பறிந்து கண்டுபிடிப்பார். அவர் எவ்வாறு கண்டுபிடித்தார் என்பதை வாசகர்கள் யூகித்து தபால் அட்டையில் எழுத வேண்டும். பல வாரங்கள் வந்த நிகழ்ச்சியின் கடைசி வாரத்தில் ரத்தினம் இறந்து விட்டார் என்றார்கள்.உண்மையா என்பது தெரியவில்லை.

அக்டோபர் இரண்டாம் தேதி நம் வானொலி நிலையத்தில் டி.ஆர் பாப்பாவின் மெல்லிசைகள் காந்தியின் புகழ் பரப்ப, தமிழ்சேவை ஒன்றில் காந்தியின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பேச்சை ஒளிபரப்பி மகாத்மாவை நினைவு கூர்ந்தார்கள் .உடல் சிலிர்த்தது மகாத்மாவின் பேச்சைக் கேட்டதும்.
82ம் ஆண்டு ,7.30க்கு இரவு ஒளிபரப்பையும் துவக்கினார்கள்.அன்றைய இரவு அனைவர் வீட்டிலும் அலறியது இலங்கை வானொலி. இவ்வொலிபரப்பு ஆரம்பித்த சில மாதங்களிலேயே இலங்கைக் கலவரம் வெடித்தது.யாழ்ப்பாணம் ஒளிபரப்பு நின்று போனது.

இந்தி தெரியாவிடினும், என்னை இந்திப் பாடல்களை ரசிக்க வைத்தது இலங்கை வானொலி. இப்பொழுது சென்னையில் இருப்பதால் இலங்கை வானொலி கேட்க இயலவில்லை. இவர்களிடம் இல்லாத பாடல்களே இல்லை எனலாம்.

மெல்லிசை , துள்ளிசை என வகைப்படுத்தி பாட்டுப் போடுவார்கள்.

நம்ம ஊர் மாதிரி முதல் பாடல் " கண்ணே கலை மானே" இரண்டாம் பாடல் " ஆள்தோட்டா பூபதி" என தாவ மாட்டார்கள்.

எந்தப் பாடல், எங்கிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்பதற்காகவும் ஒரு நிகழ்ச்சி வைத்திருந்தார்கள். "மேகமே மேகமே" பாடல் ஜப்பானிய இசையை தழுவி எடுத்ததாக அந்த இசையையும் ஒளிபரப்பினார்கள்.

முன்பு சொன்னதைப் போல நண்பனை இழந்து விட்டேன். இருப்பது நினைவுகள் மட்டுமே.

No comments: