7 December 2012

சீனாவினால் தயாரிக்கப்பட்டுள்ள  இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் சுப்ரீம் சாட் 1
சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இச் செயற்கைக்கோள், எதிர்வரும் 2013ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்குப் பின்னர் வர்த்தக  நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.மேற்படி இச் செயற்கைக்கோள் கடந்த 22ஆம் திகதி விண்ணுக்கு ஏவப்படவிருந்த நிலையில்  சீரற்ற காலநிலையால் 5 நாட்கள் தாமதமாகி இன்று விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த செயற்கைக்கோளை கட்டுப்படுத்துவதற்கான நிலையம் கண்டியில்  அமைக்கப்படவுள்ளது. வரலாற்றில் உலகில் சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை  வைத்திருக்கும் 45ஆவது நாடாக இலங்கை இடம்பிடித்துள்ளதுடன் தெற்காசியாவிலேயே  இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை   வைத்துள்ள மூன்றாவது நாடு என்ற பெருமையையும் இலங்கை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 


No comments:

Post a Comment